sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு டாக்டரை கத்தியால் வெட்டியதால் பதற்றம் சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

/

அரசு டாக்டரை கத்தியால் வெட்டியதால் பதற்றம் சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அரசு டாக்டரை கத்தியால் வெட்டியதால் பதற்றம் சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அரசு டாக்டரை கத்தியால் வெட்டியதால் பதற்றம் சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


ADDED : ஏப் 16, 2024 06:53 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரசு மருத்துவமனையில் போதையில் இருந்தவர், டாக்டரை கத்தியால் வெட்டியதால், அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பூமியான்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார், 38; இவரது மகன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, ரெட்டியார்பாளையம் சாலையில், தனது நண்பர்களுடன் பைக்கில் செல்லும் போது படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த, அவர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகனை பார்க்க வினோத்குமார், நேற்று இரவு 9:30 மணியளவில், அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று விட்டு, அங்கிருந்து வெளியில் சென்றார்.

அப்போது, இரவு பணியில் இருந்த முதுநிலை மருத்துவம் படித்து வரும் டாக்டர், நவீன், 28; அவசர சிகிச்சை பிரிவில் வெளியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார்.

அப்போது, மருத்துவமனையில் வெளியில் நின்ற வினோத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் நவீனின் கழுத்தில் வெட்டினார்.

கழுத்தில் பலத்த வெட்டு காயமடைந்த டாக்டர் கூச்சல் போடவே, புறக்காவல் நிலையத்தில், பணியில் இருந்த போலீசார், மற்றும் ஊழியர்கள், டாக்டரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து, அவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது.

கத்தியால் வெட்டிய, வினோத்குமாரை புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் கைது செய்து, பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டரை கத்தியால் வெட்டிய சம்பவத்தை அடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், அவரச சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், பணியை புறக்கணித்து மருத்துவமனை வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த சுகாதாரத் துறை செயலர் முத்தம்மா, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எம்.பி., வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., நேரு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட, மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, டாக்டர்கள், அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித் தனர்.

பெரியக்கடை போலீசார் கத்தியால் வெட்டிய, நபர் மது போதையில், சைக்கோ போல இருந்ததாலும், எதற்காக டாக்டரை கத்தியால் வெட்டினார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us