/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டு கதவு உடைத்து நகை, பணம் திருட்டு
/
வீட்டு கதவு உடைத்து நகை, பணம் திருட்டு
ADDED : செப் 04, 2024 07:43 AM
புதுச்சேரி : வீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மூலக்குளம் திருநகர் ரோட்டை சேர்ந்தவர் டாக்டர் சசீந்திரன். இவரது மனைவி ராகினி. இவர்களது மகள் நந்திதா. சசீந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். ராகினி தனது மகளுடன் வசித்து வந்தார். அவர் கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து நேற்று ராகினி, வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரி உடைக்கப்பட்டு 40 ஆயிரம் பணம், 1 சவரன் நகை திருடப்பட்டு இருந்தது. நந்திதா அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.