நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நெஞ்சுவலி ஏற்பட்டு கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார் பெருமாள்புரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 54, கூலித்தொழிலாளி. வீட்டில் இருந்த இவருக்கு நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடன் அவரை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதை உறுதி செய்தார்.
வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

