sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'எஸ்கேப்' ஆன காங்., நிர்வாகிகள் கடும் நடவடிக்கைக்கு தயாராகிறது தலைமை

/

'எஸ்கேப்' ஆன காங்., நிர்வாகிகள் கடும் நடவடிக்கைக்கு தயாராகிறது தலைமை

'எஸ்கேப்' ஆன காங்., நிர்வாகிகள் கடும் நடவடிக்கைக்கு தயாராகிறது தலைமை

'எஸ்கேப்' ஆன காங்., நிர்வாகிகள் கடும் நடவடிக்கைக்கு தயாராகிறது தலைமை


ADDED : ஏப் 21, 2024 05:21 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கும், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கும் நேருக்கு நேராக கடும் போட்டி நிலவியது.

பா.ஜ., வேட்பாளர்நமச்சிவாயம், காங்., கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தவர். இதனால், 30 தொகுதியிலும் காங்., கட்சியில் உள்ள முக்சகிய நிர்வாகிகள் அவருக்கு பரிச்சயமானவர்களாக உள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியில் காங்., கட்சிபிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில்ரீதியாக பலன் பெற்றுள்ளனர். இதனால், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள், காங்., கட்சியின் நிர்வாகிகளை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

'நீங்கள் பா.ஜ.,வுக்கு நேரடியாக ஓட்டு சேகரிக்க வேண்டாம். ஆனால் காங்., கட்சியின் பிர்சாரத்திற்கு செல்லாமல் ஒதுங்கி இருந்தால்போதும்' என நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட காங்., நிர்வாகிகள் பலர், உடல்நிலை சரியில்லை என கூறி பிரசாரத்தில் பங்கேற்காமல் 'எஸ்கேப்' ஆகி விட்டனர். இதுதவிர வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் வேகம் காட்டவில்லை.

இதுகுறித்த தகவல் காங்., தலைவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள், ஓட்டுப் பதிவு முடிந்துவிட்ட நிலையில் 'கருப்பு ஆடுகள்' மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த காங்., நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் காங்., கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us