sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காலவரையற்ற போராட்டம் தொடரும்; பேராசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

/

காலவரையற்ற போராட்டம் தொடரும்; பேராசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

காலவரையற்ற போராட்டம் தொடரும்; பேராசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

காலவரையற்ற போராட்டம் தொடரும்; பேராசிரியர்கள் சங்கம் அறிவிப்பு


ADDED : ஜூன் 19, 2024 11:55 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடந்தது.

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்களுக்கு அதற்கான சம்பள உயர்வு பலன்களை வழங்க வேண்டும், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,

பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசு மான்யத்தில் சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில் பேராசிரியர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று முன்தினம் துவங்கியது.

நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இளஞ்சேரலாதன் கூறும்போது, 'எங்களது கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால், நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

எங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்' என்றார்.






      Dinamalar
      Follow us