நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்கேயன் தனியார் பஸ் டிரைவர்.
இவரது மகள் ரக் ஷியா, 19. இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 29ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.