ADDED : ஆக 19, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் மயங்கி விழுந்த பெண் இறந்தார்.
திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உத்திரகுமார்; சுகாதாரத்துறை ஊழியர். இவரது மனைவி சித்ரா, 47. இவர் நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து சித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் ராம்குமார் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.