/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏக்லவியா சர்வதேச பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
/
ஏக்லவியா சர்வதேச பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
ஏக்லவியா சர்வதேச பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
ஏக்லவியா சர்வதேச பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
ADDED : செப் 05, 2024 05:25 AM

புதுச்சேரி: தேங்காய்த்திட்டு ஏக்லவியா சர்வதேச பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.
புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டியின், பள்ளி அளவிலான போட்டி தேங்காய்த்திட்டு ஏக்லவியா சர்வதேச பள்ளியில் நேற்று நடந்தது.
போட்டியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 450 மாணவர்கள் பங்கேற்றனர். முதல்நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர். 8 அணிகளாக பிரித்து இறுதி சுற்று போட்டி நடந்தது. இதில், 9ம் வகுப்பு மாணவர் ஜெய்வந்த், 7 ம் வகுப்பு மாணவி பூஜா முதலிடம் பிடித்தனர். 6ம் வகுப்பு மாணவர்கள் வினய், வித்தேஷ் ஆகியோர் 2ம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி சீனியர் முதல்வர் சுகந்தி விஸ்வநாதன், செயலாக்க முதல்வர் சரன்யா, ஆசிரியர்கள் தமிழரசி, ராஜராஜேஸ்வரி வழங்கி பாராட்டினர். பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும், மெகா வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.