ADDED : ஜூன் 13, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக, வரும் 14ம் தேதி காலை தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.