ADDED : ஜூலை 30, 2024 11:50 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலியார்பேட்டை அடுத்த, தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா, 27; இவரது கணவர் பாலாஜி, இவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு காரணத்தினால் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், மெடிக்கலில் வேலை செய்யும் ஸ்டெல்லாவை அவதுாறாக பேசி பாலாஜி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
