ADDED : மே 15, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமிகள் உற்சவம், 13ம்தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் செண்பக தியாகராஜர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
நேற்று செண்பகத் தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து உன்மத்த நடனத்துடன் எழுந்தருளினார். வரும் 17ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா, 19ம் தேதி தேர் திருவிழா, 20ம் தேதி சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா, 21ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. 22ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

