/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகோற்சவம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மகோற்சவம்
ADDED : செப் 09, 2024 04:59 AM

புதுச்சேரி: வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ பெருந்தேவித்தாயார் - வரதராஜ பெருமாள் 46ம் ஆண்டு திருக்கல்யாண ம ேஹாற்சவ விழா, சிறப்பு அலங்காரத்துடன் நேற்று காலை 8:30 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து திருமஞ்சனம், சாற்றுமுறை நடந்தது.
பால், தயிர், பழவகைகள், தேங்காய், இளநீர், பன்னீர்செல்வம், சந்தானம், புஷ்பம் சமர்ப்பித்த பக்தர்கள் திருமஞ்சன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாலை 6:00 மணியளவில் பெருமாள், தாயார் புறப்பாடு, மாலை மாற்றும் வைபவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண மகோற்சவம் விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு பெருமாள் - தாயார் சேர்த்தி புறப்பாடு, இரவு 10:00 மணிக்கு திருக்கண்ணாடி அறையில் பள்ளி அறை சேவை நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கோதண்டராம சுவாமி பக்த ஜனசபை, திரு கல்யாண உற்சவ பக்தர்கள் செய்திருந்தனர்.