/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளாறு சனி பகவான் இந்திர விமானத்தில் வீதியுலா
/
திருநள்ளாறு சனி பகவான் இந்திர விமானத்தில் வீதியுலா
திருநள்ளாறு சனி பகவான் இந்திர விமானத்தில் வீதியுலா
திருநள்ளாறு சனி பகவான் இந்திர விமானத்தில் வீதியுலா
ADDED : மே 15, 2024 11:09 PM

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனி பகவான் இந்திர விமானத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
காரைக்கால், திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது.
தினசரி விநாயகர், சுப்ரமணியன் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் செண்பகத் தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து உன்மத்த நடனத்துடன் எழுந்தருளினார். இரவு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை 17ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா, 19ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 20ம் தேதி சனி பகவான் தங்க காகம் வாகனத்தில் வீதியுலா, 21ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.