/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிராக்டர் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி குறிஞ்சிப்பாடி அருகே சோகம்
/
டிராக்டர் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி குறிஞ்சிப்பாடி அருகே சோகம்
டிராக்டர் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி குறிஞ்சிப்பாடி அருகே சோகம்
டிராக்டர் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி குறிஞ்சிப்பாடி அருகே சோகம்
ADDED : மே 20, 2024 04:01 AM

வடலுார், : றிஞ்சிப்பாடி அருகே, டிராக்டர் கவிழ்ந்து, கல்லுாரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது வயலில் நேற்று நெல் அறுவடை பணி நடந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியனின் உறவினரான கோவிந்தராஜ் மகன் லோகேஷ், 21; அறுவடை செய்த நெல்மணிகளை டிராக்டர் மூலம் அருகில் உள்ள உலர்களத்திற்கு எடுத்துச் சென்றார்.
மாலை 6:30 மணியளவில் மீண்டும் நெல்மணிகளை ஏற்றிவர டிராக்டரை வயலில் ஓட்டிச் சென்றார். இவருடன், அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் பரத், 18; குமரவேல் மகன் கோகுலகிருஷ்ணன், 19, ஆகியோர் டிராக்டரில் பயணம் செய்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் நிலைதடுமாறி, தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில், லோகேஷ், பரத் இருவரும் டிராக்டர் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கோகுலகிருஷ்ணன் காயங்களுடன் தப்பினார்.
உயிரிழந்த லோகேஷ் கடலுாரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியிலும், பரத் என்பவர் குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலைக்கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டும் படித்து வந்தனர்.
தகவலறிந்து வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் ஜே.சி.பி., உதவியுடன், டிராக்டரை அகற்றி லோகேஷ், பரத் உடலை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

