ADDED : ஜூலை 05, 2024 06:38 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப் பணிதிட்ட துவக்க விழா, போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஷ்குமார் விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்பணர்வு குறித்து விளக்கப்பட்டது. 'வன மகோத்சவம்'வாரத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வளர்மதி செய்திருந்தார்.
