UPDATED : ஜூலை 14, 2026 09:00 PM
ADDED : ஜூலை 14, 2026 08:43 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் ஜூலை 13 மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அரசலாபுரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன், 21; என்பவர் மது போதையில் நெட்டப்பாக்கம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல் மங்கலம்-ஏம்பலம் மெயின் ரோட்டில் மது போதையில் ஆபாசமாக பேசிய ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் 38, என்பவரை மங்கலம் போலீசர் கைது செய்தனர்.
