ADDED : செப் 09, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை நைனார் மண்டபம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 57. முத்தியால்பேட் வி.ஒ.சி.நகரைச் சேர்ந்தவர் ஜெயபால், 57. இருவரும், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், மது குடித்துவிட்டு ஆம்பூர் சாலையில், நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியக்கடை போலீசார், தகராறில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.