ADDED : ஜூன் 16, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பஸ் நிலையத்தில் ரகளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் 2 பேர் ரகளை செய்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரனையில் அவர்கள், தேனி மாவட்டம் டி.அவுலபுரத்தை சேர்ந்த தர்மராஜ், 41; மணிகண்டன், 27; என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.