/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய இரு வாலிபர்கள் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய இரு வாலிபர்கள் கைது
ADDED : ஆக 23, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் சாலை ஆர்.கே., நகர் பகுதியில் இரண்டு வாலிபர்கள் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டி வருவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், அரியாங்குப்பத்தை சேர்ந்த ஆகாஷ்ராஜ், 29; தமிழ்ச்செல்வன், 31; என தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.