sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விரைவான புயல் நிவாரணம் இங்கிலாந்து துணை துாதர் வியப்பு

/

விரைவான புயல் நிவாரணம் இங்கிலாந்து துணை துாதர் வியப்பு

விரைவான புயல் நிவாரணம் இங்கிலாந்து துணை துாதர் வியப்பு

விரைவான புயல் நிவாரணம் இங்கிலாந்து துணை துாதர் வியப்பு


ADDED : மார் 04, 2025 04:34 AM

Google News

ADDED : மார் 04, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, விரைந்து புயல் நிவாரணம் வழங்கியதை கண்டு வியப்பதாக, இங்கிலாந்து நாட்டு துணை தூதர் பாராட்டினார்.

சென்னையிலுள்ள, இங்கிலாந்து நாட்டு துணை துாதர் ஹலிமா ஹாலந்த், புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, துணை துாதரக ஹலிமா ஹாலந்த் பேசும்போது, தங்களது தலைமையிலான அரசு, செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக, மக்களிடையே வரவேற்பை பெற்றவையாக உள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, பெஞ்சல் புயல் நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொண்டது மட்டுமல்லாது, மக்களுக்கு அறிவித்த இழப்பீட்டு தொகையையும் உடனடியாக அளித்தது, எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இதை எப்படி செய்தீர்கள் என, முதல்வர் ரங்கசாமியிடம் வினவினார். அதற்கு முதல்வர் ரங்கசாமி, எனது அரசு மக்களுக்கான அரசு. சொன்னதை செய்யும் அரசாக உள்ளது. மக்கள், எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் காரணமாகவே இது முடிந்தது என்றார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில், புதுச்சேரி சிறந்து விளங்குவதை நாங்கள் அறிவோம். உங்களுடைய மக்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்ட இங்கிலாந்து துணை துாதர்.






      Dinamalar
      Follow us