ADDED : செப் 04, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி, நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.