ADDED : மார் 11, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை சிங்கம் பார்க் அருகே நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்து கிடந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.