ADDED : ஜூன் 17, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : திருநள்ளாறு பஸ் நிலையம் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால், திருநள்ளாறு புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.