ADDED : மே 12, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், புதியதாக பள்ளியில் சேர்க்கவுள்ள குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் கல்வி துவக்க நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு நடந்தது. இதில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகள் நெல் மணியில் முதல் எழுத்தை எழுதினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.