ADDED : மார் 13, 2025 06:36 AM
அ நிறம் | அளவு
சிறை துறைக்கு அறிவித்த அறிவிப்புகள்;
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறை கைதிகளின் அனைத்து தகவல்களும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும்.
இதன் மூலம் சிறை கைதிகளின் அனைத்து தகவல்கள் துல்லியமாகவும், உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
சிறை கைதிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நலனிற்காக 'ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் ஏழை கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
