sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பதற்றமான ஓட்டுசாவடிகள் எவை? போலீசாருடன் கலெக்டர் ஆலோசனை

/

பதற்றமான ஓட்டுசாவடிகள் எவை? போலீசாருடன் கலெக்டர் ஆலோசனை

பதற்றமான ஓட்டுசாவடிகள் எவை? போலீசாருடன் கலெக்டர் ஆலோசனை

பதற்றமான ஓட்டுசாவடிகள் எவை? போலீசாருடன் கலெக்டர் ஆலோசனை


ADDED : மார் 22, 2024 05:50 AM

Google News

ADDED : மார் 22, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும், புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் பதற்றமான ஓட்டுசாவடிகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான போலீஸ்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.

துணை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கோதாரு, உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., நார சைதன்யா, எஸ்.பி.,க்கள் லட்சுமி சுஜன்யா, ரகுநாயகம், பாஸ்கர், பழனிவேல், மாவட்ட துணை தேர்தல் அதிகாரி வினயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்தனர்.

ஓரிரு தினங்களில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us