/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு? களை கட்டும் தேர்தல் சூதாட்டம்
/
தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு? களை கட்டும் தேர்தல் சூதாட்டம்
தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு? களை கட்டும் தேர்தல் சூதாட்டம்
தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு? களை கட்டும் தேர்தல் சூதாட்டம்
ADDED : ஏப் 21, 2024 05:24 AM
புதுச்சேரியில் ஓட்டுப் பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பது குறித்த சூதாட்டம் களை கட்டி உள்ளது.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நமச்சிவாயம், காங்., வேட்பாளராக வைத்திலிங்கம், அ.தி.மு.க., வேட்பாளராக தமிழ்வேந்தன் போட்டியிட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஓட்டுப் பதிவு நேற்று முன்தினம் நடந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பது குறித்து டீ கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம், வணிக நிறுவனங்கள், நண்பர்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினரிடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
இது, ஒரு கட்டத்தில் சூதாட்டமாக உரு மாறியது.
காங்., வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஒரு தரப்பினரும், பா.ஜ., வேட்பாளர் வெற்றிக் கனியை பறிப்பார் என இன்னொரு தரப்பினரும் பந்தயம் கட்டி வருகின்றனர். இதற்காக, லட்சக்கணக்கான ரூபாய் பந்தய பணமாக கட்டப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாமல், வில்லியனுார் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெற்ற ஓட்டுகளைவிட ஒரு ஓட்டாவது கூடுதலாக காங்., வேட்பாளருக்கு கிடைக்கும் என ஒரு தரப்பினரும், வாய்பே இல்லை; இம்முறை வில்லியனுார் தொகுதியில் நமச்சிவாயம் அதிக ஓட்டுகளை பெற்று தொகுதியில் முதலாவதாக வருவார் என எதிர்தரப்பினரும் ஆயிரக்கணக்கான ரூபாயை பந்தயம் கட்டி வருகின்றனர்.
இதுபோன்ற சூதாட்டம், மண்ணாடிப்பட்டிலும் களை கட்டி உள்ளது.
சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டுகளை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர். இன்னொரு பக்கம், இந்த முறை சரித்திரம் மாறும்; மண்ணாடிப்பட்டில் வைத்திலிங்கமே அதிக ஓட்டுகளை பெற்று சாதிப்பார் என எதிர்தரப்பினரும் பணத்தை பந்தயமாக கட்டி வருகின்றனர்.
அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

