ADDED : மே 04, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வேலைக்கு சென்ற மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். வில்லியனுார், கோட்டைமேடு அகோர மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜா, 34; கொத்தனார்.
இவரது மனைவி மகாலட்சுமி ஒதியம்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
மகாலட்சுமி கடந்த 1ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்துராஜா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.