ADDED : ஆக 23, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்தால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட்டை, சாந்திநகர் கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58, கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார்.
இதனை அவரது மனைவி மஞ்சுளா கண்டித்தாா். மனமுடைந்த சீனிவாசன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.