ADDED : செப் 16, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் வலிப்பு நோய் ஏற்பட்டு மீன்பிடித் தொழிலாளி உயிரிழந்தார்.
காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்தவர் வீரமணி 52. இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக இடுப்பு வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இவர் தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந் தார். நேற்று முன்தினம் வீரமணி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பின் திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடன் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.