நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: விவசாய நிலத்தில் மயங்கி கிடந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
நெட்டபாக்கம், சூரமங்கலம்பேட், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 58; கூலி தொழிலாளி. பெரியக்காலாப்பட்டு பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவரின் நிலத்தில் பாதுகாவலராக வேலை செய்து வந்தார். கடந்த 24ம் தேதி நிலத்தில் வாயில் நுரை தள்ளியபடி படுத்து கிடந்தார்.
அருகில் இருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியிலே வெங்கடேசன் உயிரிழந்தார். இறப்பிற்கான காரணம் தெரியவில்லை.
காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

