நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி பரிதபமாக இறந்தார்.
வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் 55, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் மாடியில் துாங்கியவர் திடீரென கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சரவணன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

