ADDED : ஜூன் 16, 2024 05:49 AM
அ நிறம் | அளவு
திருக்கனுார்: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பொம்பூர் புது காலனியை சேர்ந்தவர் முருகன், 57; கூலி தொழிலாளி.
குடிப்பழக்கம் உடையமுருகன், கடந்த 9ம் தேதிதிருக்கனுார் சாராயக்கடையில், அதிகமாக குடித்து விட்டு, கே.ஆர்.பாளையம் எடை மேடை அருகே மயங்கி கிடந்தார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
