ADDED : மே 04, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, சாரம் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வாழுமுனி, 61; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 1ம் தேதி அதிகமாக குடித்து விட்டு, லெனின் வீதியில் உள்ள சைடு வாய்க்காலில் விழுந்தார்.
உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று காலை குளிப்பதற்கு குளியலறைக்கு சென்றபோது வாழுமுனி வழுக்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.