தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 


ADDED : ஏப் 17, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருமாம்பாக்கம் அடுத்த சுள்ளியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வினாயக முருகன் 55; கூலி தொழிலாளி.

இவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்து வந்தார். இதனை, அவரது மனைவி கீதா கண்டித்ததால், அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.

கோபித்து கொண்டு கீதா கொரவள்ளிமேடு கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

மனமுடைந்த வினாயகமுருகன், கடந்த 7ம் தேதி விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மகள் சித்ரா அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us