ADDED : ஜூலை 14, 2024 06:25 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
