நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
வில்லியனுார் அடுத்த கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு அபி ேஷக ஆராதனைகள், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
கடந்த 6ம் தேதி மாலை பகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி, 7ம் தேதி இரவு அர்ச்சுனன் - திரவுபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. நேற்று காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இன்று விடையாற்றி உற்சவம் நடக்கிறது.