நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுாரில் வலியால் அவதிப்பட்ட இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் கணுவாபேட்டையைச் சேர்ந்தவர் மெகராஜ் பேகம், 30. இவ ருக்கு தோல்பட்டை எலும்பு வளர்ந்து வருவதால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் வலியால் அவதிப்பட்ட மெகராஜ்பேகம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

