UPDATED : மே 18, 2026 10:26 PM
ADDED : மே 18, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கீழ்குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார் 28, என்பவர், மது போதையில், கரிக்கலாம்பாக்கம் குடியிருப்பு நகர் பகுதி அருகில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் இடையூறு செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
