sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவு  மாற்றம் 

/

ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவு  மாற்றம் 

ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவு  மாற்றம் 

ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவு  மாற்றம் 


ADDED : ஜூன் 04, 2024 04:49 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஜிப்மரின் அவசர சிகிச்சை பிரிவு, வரும் 6 ம் தேதி முதல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இணைப்பு கட்டடத்தில் மாற்றப்படுகிறது.

ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

இதில், புதுச்சேரி சுற்றி யுள்ள பகுதியில் நடக்கும் விபத்து மற்றும் அவரச சிகிச்சை தேவைப்படுவோர், ஜிப்மரின் நுழைவு வாயில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள கட்டடத்தில் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது.

இங்கு, தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளதால், தற்காலிகமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு இணைப்பு கட்டடத்தில் அவசர சிகிச்சை பிரிவு இயங்க உள்ளது.

ஜிப்மர் மருத்துவ இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நோயாளிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அவசர கால சிகிச்சை பிரிவு கட்டடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு கருவிகள் அமைக்கும் பணிகளை ஜிப்மர் மேற்கொள்ள உள்ளது. இப்பணிக்களை முடிக்க சுமார் 4 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கால கட்டடத்தில் ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் (எஸ்.எஸ்.பி.) இணைப்பு கட்டிடத்தில் நாளை மறுநாள் 6ம் தேதி முதல் தடையற்ற அவசர கால சேவைகளை ஜிப்மர் தொடர்ந்து வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us