ADDED : டிச 23, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மனுக்கு, 1,008 குடம் பால் அபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது.
திருக்கனுாரில் அமைந்துள்ள திருவக்கரை வக்ரகாளியம்மன் வழிபாடு தலைமை நற்பணி மன்றம் சார்பில், 24ம் ஆண்டு 1,008 பால் குட அபிஷேகம் மற்றும் அன்னதான விழா வரும் 25ம் தேதி நடக்கிறது.அன்று காலை 7:00 மணிய ளவில் பக்தர்கள், திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து, 1,008 பால் குடங்களை பாதயாத்திரையாக எடுத்து சென்று, திருவக்கரை வக்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

