/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
/
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது இலங்கை கடற்படை அட்டூழியம்
ADDED : ஜன 03, 2026 05:16 AM
காரைக்கால்: கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் தினமும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 29ம் தேதி கீழகாசாகுடிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் விசைப்படகில், அவருடன் அதேப் பகுதியை சேர்ந்த ரஞ்சித்,18; நாகராஜ், 35; கண்ணன், 58; அஞ்சப்பன்,34; ராஜேந்திரன், 39; தங்கவேல்,34; ரங்கநாதன், 37; சுப்ரமணியன், 50; பக்கிரிசாமி,43; முத்துக்குமரன், 51, ஆகிய 11 பேர் கடந்த 29ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி, மீனவர்கள் 11 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களது படகு, வலைகள் மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்கள் 11 பேரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

