sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அன்னை ரயில் நிலையம் வந்த 111வது நினைவு தினம்

/

அன்னை ரயில் நிலையம் வந்த 111வது நினைவு தினம்

அன்னை ரயில் நிலையம் வந்த 111வது நினைவு தினம்

அன்னை ரயில் நிலையம் வந்த 111வது நினைவு தினம்


ADDED : மார் 30, 2025 03:28 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி நபத்வீப் தாம் பங்கவானி அறக்கட்டளை, உலக அமைதி அறக்கட்டளை சார்பில் ரயில் நிலையத்திற்கு அன்னை வந்ததன் 111வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் லட்சுமிநாராயணன் அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி நபத்வீப் தாம் பங்கவானி அறக்கட்டளை, உலக அமைதி அறக்கட்டளை சார்பில் ரயில் நிலையத்திற்கு அன்னை வந்த 111வது ஆண்டு நினைவு தினம் நேற்று நடந்தது.

புதுச்சேரியில் அரவிந்தரை அவரது ஆசிரமத்தில் சந்திக்க, அன்னை கடந்த 1914ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி முதல் முறையாக புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தார். இதையொட்டி, புதுச்சேரி நபத்வீப் தாம் பங்கவானி அறக்கட்டளை, உலக அமைதி அறக்கட்டளை சார்பில் அன்னை ரயில் நிலையத்திற்கு வந்த 111வது ஆண்டு நினைவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னையின் உருவப்படத்திற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மலர்துாவி மரியாதை செலுத்தினார். இதில், ஒருங்கிணைப்பாளர் திப்யேந்து கோஸ்வாமி, புத்தக சங்க இயக்குனர் முருகன் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us