sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

2 பெண்களிடம் 13 சவரன் நகை பறிப்பு புதுச்சேரியில் மர்ம நபர்கள் கைவரிசை

/

2 பெண்களிடம் 13 சவரன் நகை பறிப்பு புதுச்சேரியில் மர்ம நபர்கள் கைவரிசை

2 பெண்களிடம் 13 சவரன் நகை பறிப்பு புதுச்சேரியில் மர்ம நபர்கள் கைவரிசை

2 பெண்களிடம் 13 சவரன் நகை பறிப்பு புதுச்சேரியில் மர்ம நபர்கள் கைவரிசை


ADDED : செப் 22, 2024 01:45 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் 13 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் கடந்த வாரம் கோரிமேடு எல்லைக்கு உட்பட்ட கவிக்குயில் நகரில் 2 இடங்களில் வழிப்பறி நடந்தது. ரெட்டியார்பாளையம் மற்றும் கதிர்காமத்தில் இரு டாக்டர் வீடுகளை உடைத்து திருட்டு சம்பவம் நடந்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று முன்தினம் மாலை பைக்கில் வந்த 2 வாலிபர்கள், அனிதா நகர், வேல்ராம்பட்டு பகுதியில் அடுத்தடுத்து 4 பெண்களிடம் செயின் பறிக்க முயன்றனர். அவர்களின் அலறல் சத்தம் காரணமாக செயின் பறிப்பு சம்பவங்கள் தோல்வியில் முடிந்தன.

இதனிடையே புதிய பைபாஸ் சாலை வழியாக சென்ற மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, கோவிலுக்கு சென்று திரும்பிய, ரெட்டியார்பாளையம் வயல்வெளி நகரைச் சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள், 74; அணிந்திருந்த 7 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

அங்கிருந்து சென்ற செயின் பறிப்பு ஆசாமிகள், கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகர், ஜீவானந்தம் வீதியில் நடந்து சென்ற செல்வகுமார் மனைவி உமாவதி, 52; என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 6.5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் மற்றும் கோரிமேடு போலீசார் தனித் தனியாக செயின்பறிப்பு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us