sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாத்தனூர் அணையில் 19,500 கனஅடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

/

சாத்தனூர் அணையில் 19,500 கனஅடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சாத்தனூர் அணையில் 19,500 கனஅடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சாத்தனூர் அணையில் 19,500 கனஅடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


ADDED : டிச 02, 2024 05:28 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: பெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

'பெஞ்சல்' புயல் காரணமாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 18,500 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், 118.05 அடி, 7,108 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 19,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இணையும் துரிஞ்சல் ஆற்றில் இருந்து வினாடிக்கு 5000க்கும் அதிகமான கன அடி நீர் சேர்வதால் தென்பெண்ணை ஆற்றில் இரு கரையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.






      Dinamalar
      Follow us