ADDED : பிப் 17, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்; பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
சோரியாங்குப்பம், மகரிஷி நகர் சாலையில் இரண்டு பேர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள், கடலுார், டி. புதுார் பகுதியை சேர்ந்த அஜித்குமார், 28; கம்மியம்பேட்டை ஞானசேகரன், 38, என, தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.