ADDED : மார் 14, 2024 11:16 PM

திருக்கனுார்: திருக்கனுார் ஏரிக்கரை பகுதியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூர் பகுதியை சேர்ந்த அய்யனார், 48; மணிகண்டன், 28; என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் சோதனை நடத்தியதில், மொத்தம் 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.1200 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்தது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

