/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதையில் ரகளை 2 வாலிபர்கள் கைது
/
போதையில் ரகளை 2 வாலிபர்கள் கைது
ADDED : அக் 27, 2024 03:41 AM
புதுச்சேரி : பொது இடத்தில், மது போதையில் ரகளையில் ஈடுப்பட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோரிமேடு, ஜிப்மர் மருத்துவமனையில் அருகே மது போதையில், பொதுமக்களிடம் தகராறு செய்வதாக நேற்று முன்தினம் டி.நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு, ரகளை செய்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர், தமிழகம், புதுக்கோட்டையை சேர்ந்த காளிதாஸ், 23; என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதே போல, மேட்டுப்பாளையம் சந்திப்பில், பொதுமக்களிடம், போதையில், ரகளை செய்த காலாப்பட்டை சேர்ந்த சம்பத்குமார்,27, என்பவரை மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.