sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது

/

 காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது

 காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது

 காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது


ADDED : பிப் 17, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, காரைக்கால் மீனவர்கள், 24 பே ரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 54; இளங்கோவன், 54, உட்பட, 14 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதேபோல், கீழகாசாகுடியை சேர்ந்த வைத்தியநாதன் விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த மோகன், 30; சின்னயன், 48, உட்பட, 10 பேர், 12ம் தேதி கடலுக்கு சென்றனர். இரு குழுவினரும் நேற்று முன்தினம் இரவு, கோடியகரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, 24 பேரையும் கைது செய்து, இரு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us