sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேர் கைது காரைக்காலில் 3 பேர் கைது

/

ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேர் கைது காரைக்காலில் 3 பேர் கைது

ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேர் கைது காரைக்காலில் 3 பேர் கைது

ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேர் கைது காரைக்காலில் 3 பேர் கைது


ADDED : ஜூலை 21, 2025 05:00 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், நெடுங்காடு அகரமாங்குடி வடக்குத் தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தி,36; தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரை, கடந்த 2023ம் ஆண்டு அணுகிநெடுங்காடு, வாதிருப்பு சாலையை சேர்ந்த நீலமேகம், 45;என்பவர், காரைக்கால் ஜிப்மர் மருந்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கு,ரூ. 2.50 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய தட்சிணாமூர்த்தி முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய்கொடுத்துள்ளார்.இதையடுத்து,நீலமேகம் ஜிப்மர் மருந்துவமனையின்கண்காணிப்பாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை தட்சிணாமூர்த்தியிடம் கொடுத்து , மேலும் ரூ.1.50 லட்சம் கேட்டுள்ளார்.இதற்கிடையே, தட்சிணாமூர்த்தி ஜிப்மர் மருந்துவமனையில் விசாரித்தபோது, அவரிடம் வழங்கப்பட்ட பணி ஆணை போலியானது என்று தெரியவந்தது.

இதேபோல், காரைக்காலைச் சேர்ந்த சூசைமேரி, மங்கையர்கரசி, தரனிஷ், வாசு தேவன் ஆகியோரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி நீலமேகம் ரூ.2.55 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் நீலமேகம், புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த ராஜகணபதி, 25; ஜானகிராமன், 25; திருநள்ளாரை சேர்ந்த காயத்ரி,40;ஆகியோர் மீது நெடுங்காடு போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதில், ராஜகணபதி, ஜானகிராமன், காயத்ரி ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்






      Dinamalar
      Follow us